அஞ்சாதே இயேசு ரட்சகர்

கி.கீ:231

To Download Txt Lyrics file

 

Youtube Link

 

                   இயேசு ரட்சகர் ஆத்துமத் துயர் நீக்க வல்லவர்

 

231. (250) கரஹரப்பிரியை                                       ரூபகதாளம்

 

                             பல்லவி

 

            அஞ்சாதே யேசு ரட்சகர்

          ஆத்மத்துயர் நீக்க வல்லவர்.

 

                             அனுபல்லவி

 

           வஞ்சமே மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று. - அஞ்

 

                            சரணங்கள்

 

1.        திருடன் ஒருவன் மரிக்கும் வேளையில்

           திருச்சுதன் பதம் தழுவிக் கதிக்-கு

           அருள் பெற்றான், என் வேதஞ் சொல்வதை

           ஆய்ந்து மனஞ் சாய்ந்து நீ செல். - அஞ்

 

2.        வெள்ளிக் காசொன்றை இழந்து விட்டவள்

           வீட்டைப் பெருக்கிப் பார்த் தெடுத்தபின்,

           துள்ளிப் பூரிக்கும் போல் உன்மேலே,

           தூதர் சங்கமும் களிப்பதாலே. - அஞ்

 

3.        மேய்ப்பன் மந்தையை விலகின ஆட்டை

           வெகு கவலையாய்த் தேடிக் கண்டபின்,

           வாய்ப்புடன் மனம் மகிழும் போலே,

           மானுவேலுனைத் தழுவலாலே. - அஞ்

 

4.        தொண்ணூற் றொன்பது நீதியரிலுந்

           துயரடை பாவி யொருவன் மீதினில்

           எண்ணருந் தூதர் மகிழ்வதாலே

           இரட்சிப் புனக்குப் பலித்ததாலே. - அஞ்

 

5.        மரணத்தின் கூரை ஒடித்த வல்லவன்

           வருந்தி அழைத்த விருந்துக்கு வரத்

           தருணம் ஈதெனத் தாசர்கூடிச்,

           சாற்றும் மொழியை ஏற்று நீவர. - அஞ்

 

 

- ச.ஐ. பாளையங்கோட்டை.

 

 

https://www.youtube.com/watch?v=Y2OTwvpSyzA

Comments