அஞ்சாதே இயேசு ரட்சகர்
இயேசு
ரட்சகர் ஆத்துமத் துயர் நீக்க வல்லவர்
231. (250) கரஹரப்பிரியை ரூபகதாளம்
பல்லவி
அஞ்சாதே
யேசு ரட்சகர்
ஆத்மத்துயர்
நீக்க வல்லவர்.
அனுபல்லவி
வஞ்சமே
மிஞ்சுமா பஞ்சபாதகன் நானென்று. - அஞ்
சரணங்கள்
1. திருடன்
ஒருவன் மரிக்கும் வேளையில்
திருச்சுதன்
பதம் தழுவிக் கதிக்-கு
அருள் பெற்றான்,
என் வேதஞ் சொல்வதை
ஆய்ந்து
மனஞ் சாய்ந்து நீ செல். - அஞ்
2. வெள்ளிக்
காசொன்றை இழந்து விட்டவள்
வீட்டைப்
பெருக்கிப் பார்த் தெடுத்தபின்,
துள்ளிப்
பூரிக்கும் போல் உன்மேலே,
தூதர் சங்கமும்
களிப்பதாலே. - அஞ்
3. மேய்ப்பன்
மந்தையை விலகின ஆட்டை
வெகு கவலையாய்த்
தேடிக் கண்டபின்,
வாய்ப்புடன்
மனம் மகிழும் போலே,
மானுவேலுனைத்
தழுவலாலே. - அஞ்
4. தொண்ணூற்
றொன்பது நீதியரிலுந்
துயரடை
பாவி யொருவன் மீதினில்
எண்ணருந்
தூதர் மகிழ்வதாலே
இரட்சிப்
புனக்குப் பலித்ததாலே. - அஞ்
5. மரணத்தின்
கூரை ஒடித்த வல்லவன்
வருந்தி
அழைத்த விருந்துக்கு வரத்
தருணம்
ஈதெனத் தாசர்கூடிச்,
சாற்றும்
மொழியை ஏற்று நீவர. - அஞ்
- ச.ஐ. பாளையங்கோட்டை.
https://www.youtube.com/watch?v=Y2OTwvpSyzA
Comments
Post a Comment